குறள் பாட்டு: வெகுளாமை
இணர்எரி தோய்வன்ன இன்னாசெயினும்புணரின் வெகுளாமை நன்று.
அறத்துப்பால் - அதிகாரம் 31 - பாடல் 8
இணர்எரி தோய்வன்ன இன்னாசெயினும்
புணரின் வெகுளாமை நன்று.
எரியும் நெருப்பில் தள்ளிடும்
தீமையான செயலைப் போல்
துன்பமான செயல்களை
யார் செய்தாலும் பொறுத்திடு
எத்தனை கொடுமை செய்தாலும்
திருப்பித் தாக்க எண்ணாமல்
தாங்கிப் பொறுத்துக் கொள்வது
கோபம் வெல்லும் செயலாகும்.
- ஆசி.கண்ணம்பிரத்தினம்