சிறுவர்மணி

தெரிந்து கொள்ளுங்கள்...

ரயில் பெட்டிகளின் ஓரத்தில் இருக்கும் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் எதற்காக?இந்தியாவில் 1853-ஆம் ஆண்டில்தான் ரயில் சேவை துவங்கப்பட்டது.

ரொசிட்டா

ரயில் பெட்டிகளின் ஓரத்தில் இருக்கும் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் எதற்காக?
இந்தியாவில் 1853-ஆம் ஆண்டில்தான் ரயில் சேவை துவங்கப்பட்டது.  1951-ஆம் ஆண்டில் தேசிய மயமாக்கப்பட்டது. அன்று முதல் ரயில் துறை பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இப்படி ஒருநாள் வந்த மாற்றம்தான் மஞ்சள் நிறக் கோடுகள்.

விரைவு வண்டிகள், சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிற ரயில் பெட்டிகளைக் கொண்டிருக்கும். பெரும்பாலான பெட்டிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளாக இருக்கும். ஒரு சில பெட்டிகள் மட்டுமே முன்பதிவில்லாத பெட்டிகளாக இருக்கும்.

இந்த நீலநிற பெட்டியில்  கடைசி ஜன்னலுக்கு மேல் மஞ்சள் நிற சாய்வுத் கோடுகள் இருக்கும். இந்தக் கோடுகள் இருந்தால் அந்தப் பெட்டிகள் முன் பதிவு இல்லாத பெட்டிகள் என்று அர்த்தம்.  முன்பதிவு உள்ள பெட்டிகளில் இந்தக் கோடுகள் இருக்காது. முன்பதிவில்லாத பெட்டியை பயணிகள் எளிதாகக் கண்டுபிடிக்கவே கோடுகள் போடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படகுப் பயணம்... அப்சரா ராணி!

தில்லி காற்று மாசுக்கு யார்க் காரணம்? வெறும் வேளாண் தீ மட்டுமல்ல..

ரொம்ப அழகா தெரிய முயற்சி செய்வதில்லை... ரகுல் பிரீத் சிங்!

கௌதம் கம்பீர் என்னுடைய உறவினர் கிடையாது; ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுவதென்ன?

இம்ரான் கானுக்கு என்ன ஆனது? சிறை அதிகாரிகள் விளக்கம்!

SCROLL FOR NEXT