இதுதான் ஆலயம்
செலுத்தும் உளியின் அழகினிலே கல்லும் அழகாய் தெரிகிறது
செலுத்தும் உளியின் அழகினிலே
கல்லும் அழகாய் தெரிகிறது
சிற்பி அறிவுத் தெளிவினிலே
Advertisement
Advertisement
சிலையும் அழகுடன் சிரிக்கிறது!
-----
கல்லில் பலவகை உண்டாமே
சொல்லும் சுவை தர பேசுமாம்
நாத ஒளியும் கேட்குமாம்
நட்பாய் நலமுடன் சிரிக்குமாம்!
-----
வேத மந்திரம் ஓதியுமே
வியத்தகு சாதனை புரிவாரே
தோஷ மின்றி கடவுளென
கருவறை உள்ளே வைப்பாரே!
-----
திடமாய் திருப்பணி செய்வாரே
குடமுழுக்கு செய்ய மக்களையும்
ஒன்று சேர்த்து வைப்பாரே
இதுதான் ஆலயம் என்பாரே!
ஆரிசன், கீழ்க்கொடுங்காலூர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.