FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பணக்கார வீரர்கள்...

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான்கள் மைதானத்தில் மட்டுமல்ல; திறமையான தொழில்முனைவோர்களாகவும் முதலீட்டாளர்களாகவும் மின்னுகின்றனர்.

8 ஜூன் 2025, 6:17 pm IST
பகிர்:

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான்கள் மைதானத்தில் மட்டுமல்ல; திறமையான தொழில்முனைவோர்களாகவும் முதலீட்டாளர்களாகவும் மின்னுகின்றனர். கிரிக்கெட் மூலம் வரும் வருவாய், விளம்பரங்கள் மூலம் வரும் வருவாய், பிராண்ட் ஒப்புதல்கள், வணிகத்தில் முதலீடுகள் அனைத்தும் அடங்கும்.

2025 மே மாத நிலவரப்படி கிரிக்கெட் வீரர்களில் அதிக சொத்துகளுக்குச் சொந்தக்காரர் விராட் கோலி. இவரது சொத்து மதிப்பு ரூ.2,080 கோடி. இரண்டாவது இடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். இவரது சொத்து மதிப்பு ரூ. 1,250 கோடி.

ரூ.1,100 கோடி சொத்துகளுடன் மூன்றாம் இடத்தில் எம்.எஸ். தோனியும், ரூ. 700 கோடி சொத்துகளுடன் சௌரவ் கங்குலி நான்காம் இடத்திலும், ரூ.400 கோடி சொத்துகளுடன் யுவராஜ் சிங் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

Advertisement

Advertisement

ரூ. 350 கோடி சொத்துகளுடன் ஆறாம் இடத்தில் விரேந்தர் சேவாக்கும், ரூ.325 கோடி சொத்துகளுடன் ரோஹித் ஷர்மா ஏழாம் இடத்திலும், ரூ.320 கோடி சொத்துகளுடன் ராகுல் திராவிட் எட்டாம் இடத்திலும், ரூ.265 கோடியுடன் கெளதம் கம்பீர் ஒன்பதாம் இடத்திலும் உள்ளனர். பத்தாம் இடத்தில் உள்ள சுரேஷ் ரைனாவின் சொத்து மதிப்பு ரூ.215 கோடி. இப்படி பட்டியல் நீளுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments