முகப்பு
சிறுவர்மணி

எழுத்து, சொல்லில் பிழை நீக்கு...!

தப்பு தவறுகள் இல்லாமல், தாங்கும் கல்வியை எழுதி, படி;

Updated On : 18 ஜனவரி 2026, 1:51 pm IST
பகிர்:

தப்பு தவறுகள் இல்லாமல்,

தாங்கும் கல்வியை எழுதி, படி;

தப்பு தவறுடன் எழுதுவதால்

Advertisement

Advertisement

பொருளில் குற்றம் வந்துவிடும்!

'நீறு' என்றே எழுதுகையில்

நெற்றியில் 'திருநீறு' என்பதுதான்,

'நீர்' என்றே எழுதிப் பார்;

குடிக்கும் நீரைக் கொண்டுவரும்!

'சிகப்பு' என்று எழுதாதே;

சொற்பொருள் பிழையைக் கொண்டுவரும்;

'சிவப்பு' என்று எழுதிப் பார்

சரியாய் 'வண்ணம்' அது குறிக்கும்!

'விபரம்' என்பதும் பெரும் தவறு;

'விவரம்' என்பதே விவரிக்கும்

'சுவரில்' என்றே எழுதுவது,

சொந்த அறிவை அழகாக்கும்!

'சுவற்றில்' என்று எழுதுவது

சிந்தனை இல்லா செயலாகும்!

'புத்தகம்' என்பது புதுவீடாகும்;

பொத்திமூடி, பொத்தி, திறப்பதால்;

பொத்தகம் என்பதே சரியாகும்,

புரிந்து படிநீ புலமை வரும்!

இத்தனை விளக்கமும் மனதில் கொள்,

மறதி வராமல் கற்றுக் கொள்;

பத்துத் தலைமுறைப் புகழ் கிடைக்கும்;

பைந்தமிழ் உனக்கு வாழ்த்துரைக்கும்!

-பொன்னியின் செல்வன், தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments