எழுத்து, சொல்லில் பிழை நீக்கு...!
தப்பு தவறுகள் இல்லாமல், தாங்கும் கல்வியை எழுதி, படி;
தப்பு தவறுகள் இல்லாமல்,
தாங்கும் கல்வியை எழுதி, படி;
தப்பு தவறுடன் எழுதுவதால்
பொருளில் குற்றம் வந்துவிடும்!
'நீறு' என்றே எழுதுகையில்
நெற்றியில் 'திருநீறு' என்பதுதான்,
'நீர்' என்றே எழுதிப் பார்;
குடிக்கும் நீரைக் கொண்டுவரும்!
'சிகப்பு' என்று எழுதாதே;
சொற்பொருள் பிழையைக் கொண்டுவரும்;
'சிவப்பு' என்று எழுதிப் பார்
சரியாய் 'வண்ணம்' அது குறிக்கும்!
'விபரம்' என்பதும் பெரும் தவறு;
'விவரம்' என்பதே விவரிக்கும்
'சுவரில்' என்றே எழுதுவது,
சொந்த அறிவை அழகாக்கும்!
'சுவற்றில்' என்று எழுதுவது
சிந்தனை இல்லா செயலாகும்!
'புத்தகம்' என்பது புதுவீடாகும்;
பொத்திமூடி, பொத்தி, திறப்பதால்;
பொத்தகம் என்பதே சரியாகும்,
புரிந்து படிநீ புலமை வரும்!
இத்தனை விளக்கமும் மனதில் கொள்,
மறதி வராமல் கற்றுக் கொள்;
பத்துத் தலைமுறைப் புகழ் கிடைக்கும்;
பைந்தமிழ் உனக்கு வாழ்த்துரைக்கும்!
-பொன்னியின் செல்வன், தஞ்சாவூர்.