முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சமையல்: தக்காளி அல்வா

தக்காளியை கொதிநீரில் போட்டு ஆறிய பின் தோலை உரித்துக் கொள்ள வேண்டும். அதனை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்

Updated On : 10 பிப்ரவரி, 2013 at 11:11 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:53 PM

தேவையானவை:

பழுத்த தக்காளி- 400 கிராம்

சர்க்கரை- 200 கிராம்

Advertisement

நெய்- 200 கிராம்

முந்திரிப்பருப்பு- 50 கிராம்

திராட்சை- 50 கிராம்

ஏலக்காய்த்தூள்- சிறிதளவு

பச்சைக் கற்பூரம்- சிறிதளவு

செய்முறை: தக்காளியை கொதிநீரில் போட்டு ஆறிய பின் தோலை உரித்துக் கொள்ள வேண்டும். அதனை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர்விட்டு சர்க்கரையைப் போட வேண்டும். பாகு கம்பிப் பதமாக வந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதைப் போட்டுக் கிளறி சுருள் பதம் வந்தவுடன் நெய்யை விட வேண்டும். முந்திரிப்பருப்பு, திராட்சை இவற்றையும் நெய்யில் வறுத்துச் சேர்க்க வேண்டும். இறுதியாக ஏலக்காய்த்தூளையும், பச்சைக் கற்பூரத்தையும் தூவி இறக்கிவிடவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.