காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்திரமேரூருக்கு அருகில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள அம்மையப்ப நல்லூரில் காணப்படும் ஆலமரத்தைக் கண்டால் ஆச்சரியப்படுவீர்கள். நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட கல்லால மரம் அவ்வூர் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. கல்லால மரத்தின் ஒவ்வொரு கிளைகளிலிருந்து தொங்கும் விழுதுகள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.
பொதுவாக திருக்கோயில்களில் கல்லால மரத்தின்கீழ் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருப்பது போன்ற சிற்ப வடிவங்கள் காணப்படும். இவ்வூரில் பூரணை - புஷ்கலை சமேத அய்யனார் எழுந்தருளியுள்ளார். அவருடைய வாகனமான குதிரை சுதை உருவங்களும் உள்ளன. ஊர் மக்களின் சிறப்பு வழிபாட்டினை இக்கோயில் பெறுகிறது.
பெரிய ஆலமரத்தின் அருகே சாலை செல்கிறது. சாலையில் செல்லும் வாகனங்கள் மரத்தின் ஊடே நுழைந்து வரும் காட்சி மகிழ்ச்சி அளிக்கும். வாகனங்களில் செல்வோர் இங்கு நிறுத்தி அய்யனாரை வழிபட்டுச் செல்கின்றனர்.
- கி. ஸ்ரீதரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.