கோவையைச் சேர்ந்த ஜி. டி. நாயுடு இந்திய விஞ்ஞானிகளில் முக்கியமானவர். உலக அளவில் முக்கிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர். இவரது அறிவு மற்றும் உழைப்பை இளம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் விதமாக இவரது வாழ்க்கை படமாக்கப்படவுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் இவர் எப்படி விஞ்ஞானியாக உயர்ந்தார் என்று இந்த சினிமா பேச போகிறது. இந்தியாவின் மாபெரும் விஞ்ஞானியான ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மாதவன் நடிக்க விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தியாவின் மாபெரும் பொறியாளர் மற்றும் விஞ்ஞானியான ஜி.டி.நாயுடு, கோயம்புத்தூரை வளப்படுத்தியவராவார். மேலும், இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டாரையும் கண்டுபிடித்தது இவர் தான். இதற்கு முன்பு "ராக்கெட்ரி; தி நம்பி எஃபெக்ட்' எனும் படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தானே இயக்கி, நடித்து வெளியிட்டார் மாதவன். அதைத்தொடர்ந்து, தற்போது விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், "திருச்சிற்றம்பலம்' பட இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கும் அடுத்த படத்திலும் மாதவன் நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்காக ஜி. டி. நாயுடு பெயரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களுடன், இந்தத் தயாரிப்பு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறது. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைகளை புரிந்தவர் ஜி.டி.நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடிகர் மாதவன் இந்திய வானவியல் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி "தி ராக்கெட்டரி நம்பி எஃபெக்ட்' எனும் திரைப்படத்தை எழுதி, இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.