சங்க இலக்கியத்தின் தனிப்பெருமை
புலவர்கள் புலமைத் தேர்வாளர்கள்' என்னும் தலைப்பில் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம், 15.9.1982-இல் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். இக்கருத்தரங்கிற்கு மேலவைத் தலைவர் மா.பொ.சிவஞானமும், முனைவர் வ.சுப.மாணிக்கனாரும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.
புலவர்கள் புலமைத் தேர்வாளர்கள்' என்னும் தலைப்பில் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம், 15.9.1982-இல் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார். இக்கருத்தரங்கிற்கு மேலவைத் தலைவர் மா.பொ.சிவஞானமும், முனைவர் வ.சுப.மாணிக்கனாரும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.
அப்போது சங்க இலக்கியங்களின் தனித்தன்மைகள் குறித்து வ.அய்., ஆற்றிய உரை வருமாறு: ""பெயர் பெற்ற நாவலாசிரியர் தகழி சிவசங்கரப்பிள்ளை ரஷ்யாவில் தாம் சென்றபோது ரஷ்ய இலக்கிய ஆசிரியர்கள் கேட்ட கேள்வியொன்றை திருவனந்தபுரத்தில் நடந்த முதல் உலக மலையாள மகாநாட்டில் உருக்கமாக வெளியிட்டார். இதை நாமும் ஏனைய திராவிட மொழி பேசுவோரும் அறிந்திருப்பது நல்லது.
""மலையாள இலக்கியமனைத்தும் சம்ஸ்கிருத சார்பாக இருக்கின்றனவே, உங்களுக்கெனத் தனி இலக்கியம் என்றுகூற ஒன்றுமில்லையே?' என்பது ரஷ்யரின் கேள்வி.
Advertisement
அதற்கு தகழி சிவசங்கரப்பிள்ளை, ""ஏன் இல்லை? எங்கள் பழைய இலக்கியமாகிய சங்க இலக்கியமும் நாட்டுப்பாடல்களும் தென்னகத்தினுடைய தனிச்சொத்துக்கள்'' என்றாராம். தென்னகத்தின் தனித்துவத்தைக் காப்பது - மானங்காப்பது சங்க இலக்கியமும் நாட்டுப் பாடல்களும்தாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தி நாம் நமது இலக்கியக் கொள்கையை வரையறை செய்து கொள்வது மிகத்தேவை''.