தமிழ்மணி

இலக்கியப் பொன்மொழிகள்

தமக்கு இன்றியமையாதோராகிய இரண்டு முதியோரும் (தாய்-தந்தை) இறந்ததைக் கண்டிருந்தும் யாரும் செல்வப் பொருளை ஒரு பொருளாகக் கருதுவார்களா? அந்தப் பொருள்களைக் கொண்டு நம் பெற்றோரை நம்மால் காப்பாற்ற முடிந்ததா?

தினமணி

இறவாத அறம் செய்க!

தமக்கு இன்றியமையாதோராகிய இரண்டு முதியோரும் (தாய்-தந்தை) இறந்ததைக் கண்டிருந்தும் யாரும் செல்வப் பொருளை ஒரு பொருளாகக் கருதுவார்களா? அந்தப் பொருள்களைக் கொண்டு நம் பெற்றோரை நம்மால் காப்பாற்ற முடிந்ததா? ஆதலால், ஒல்லும் வகையினால் எல்லாம் அறத்தைச் செய்ய வேண்டும். மலை ஊர்ந்தும் உருண்டும் நிலைபெயர்ந்தும் வரும்போது அதன் வழியில் சென்று அதைத் தடுக்கக்கூடியது எதுவும் இல்லை. மலை புரண்டு வருவது போன்றது இறப்பு. அதைத் தடுத்து நிறுத்த எவராலும் இயலாது. அதனால் இறப்பதற்கு முன்பே இறவாத அறத்தைச் செய்து உய்திபெற வேண்டும்.

இன்றி யமையா இருமுது மக்களைப்

பொன்றினமை கண்டும் பொருள்பொருளாக் கொள்பவோ?

ஒன்றும் வகையான் அறஞ்செய்க ஊர்ந்துருளின்

குன்று வழிபடுப்ப தில்.(பழமொழி நானூறு - 370)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT