தமிழ்மணி

 நன்மையும் அடைவார்! 

தினமணி

பழமொழி நானூறு
 சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்
 பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்கால்
 செயிரறு செங்கோல் செலீஇயினான் இல்லை
 உயிருடையார் எய்தா வினை. (பா-105)
 பகைவர் மூட்டிய தீயால் கொளுத்தப்பட்டு அதனின்றும் உயிர் பிழைத்துச் சென்ற பராந்தக சோழனின் மகனாகிய காரிகாற்சோழனும், இரும்பிடர்த் தலையார் என்னும் பெயரையுடைய தன் மாமனைத் துணையாகப் பெற்று, பிற்காலத்தில், குற்றமற்ற செங்கோலைச் செலுத்தினான்; (ஆதலால்), உயிருடையார் அடைய முடியாததொரு நல்வினைப் பயன் இல்லை. (க-து.) தீமையே அடைவார், என்றாயினும் நன்மையையும் அடைவர்.
 "உயிருடையார் எய்தா வினை இல்லை' என்பது பழமொழி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT