முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

"கொல்லிப் பாவையென்றே' பிறர் கருத்திலே படுமாறு, மிகுதியான அழகுடன் தோன்றும் நல்லவளே!

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:


யாவரே யாயினும் இழந்த பொருளுடையார்
தேவரே யாயினும் தீங்கோர்ப்பர் - பாவை
படத்தோன்று நல்லாய்! நெடுவேல் கெடுத்தான்
குடத்துள்ளும் நாடி விடும் (பாடல்-179)


"கொல்லிப் பாவையென்றே' பிறர் கருத்திலே படுமாறு, மிகுதியான அழகுடன் தோன்றும் நல்லவளே! நீண்ட வேலைத் தொலைத்தவன், அது மறைந்திருக்க இயலாத குடத்தின் உள்ளேயும்கூட அதனைத் தேடிப் பார்ப்பான். அதனால், தம்மிடமிருந்து தொலைந்துபோன ஒரு பொருளுக்கு உரியவர்கள், அங்கு இருந்தால் எத்தகைய சிறப்புடையவர்களே ஆயினும், ஏன்? தேவர்களே ஆனாலும்கூட, அவர்களையும் தம் பொருளைக் கவர்ந்து தமக்குத் தீமை செய்தவராகவே கருதிச் சந்தேகப்படுவர். "நெடுவேல் கெடுத்தான் குடத்துள்ளும் நாடி விடும்' என்பது பழமொழி.

முழு கட்டுரையைப் படிக்க →