பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
மாரி ஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும்பாரி மட மகள் பாண்மகற்கு நீர் உலையுள்பொன் திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்
மாரி ஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மட மகள் பாண்மகற்கு நீர் உலையுள்
பொன் திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்
ஒன்று உறா முன்றிலோ இல் (பாடல்}171)
மழை பொழியாது வறண்டு போயிருந்த காலத்திலும்கூட, பாரி வள்ளலின் மடப்பத்தை உடைய மகளானவள், தன்னை இரந்து நின்ற பாணனுக்கு நீர் உலையுள் செய்து அழகாக சமைத்து வைத்திருந்த சோற்றுப் பானையைத் திறந்து, பொன்மனங் கொண்டு சோற்றை கொடுத்து உதவினாள். ஆதலால், சென்று இரந்தால் ஒன்றும் கிடைக்காது போகிற வீட்டு முற்றம் என்பது உலகில் எதுவுமே இல்லை. "ஒன்று உறா முன்றிலோ இல்' என்பது பழமொழி.