பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
இனிதாக இசைத்தல் பொருந்திய யாழின் இனிய ஒலியைப்போல, வண்டினம் ஆரவாரிக்கும் நீர்வளமுடைய ஊரனே!
முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும்
பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ? - இன்னிசை
யாழின்வண் டார்க்கும் புனலூர! ஈனுமோ
வாழை இருகால் குலை? (பாடல்-(221)
இனிதாக இசைத்தல் பொருந்திய யாழின் இனிய ஒலியைப்போல, வண்டினம் ஆரவாரிக்கும் நீர்வளமுடைய ஊரனே! வாழை மரங்கள் இருமுறை எப்போதாவது குலை ஈனுமோ? ஈனாது. அதுபோலவே முன்பு ஒருமுறை பிழை செய்தவனையே, அவனே பின்னரும் மிகுதியாகப் பிழை செய்த காலத்தில் எவராவது பொறுப்பார்களோ? "ஈனுமோ வாழை இருகால் குலை?' என்பது பழமொழி.