பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
போர் செய்யும் வேல் போன்ற கண்களை உடையவளே! ஒருவர் நிரம்பிய பொருள்களை உடையவராயின் அவரை அருள் உடையவரும் பொருள் இல்லாதவரும் தாமே வந்து புகழ்வர்.
அருள் உடையாரும், மற்று அல்லாதவரும்,
பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை,
பொரு படைக் கண்ணாய், } அதுவால், திரு உடையார்
பண்டம் இருவர் கொளல் (பாடல்: 269).
போர் செய்யும் வேல் போன்ற கண்களை உடையவளே! ஒருவர் நிரம்பிய பொருள்களை உடையவராயின் அவரை அருள் உடையவரும் பொருள் இல்லாதவரும் தாமே வந்து புகழ்வர். மிகுந்த செல்வம் உடையவரை நோக்கிப் பலரும் வருதலும் பண்டங்களைப் பகிர்ந்து கொள்ளுதலும் இயல்பு.