காத்து, ஆற்றுகிற்பாரைக் கண்டால், எதிர் உரையார்,
பார்த்து ஆற்றாதாரைப் பரியாது மீதூர்தல்
யாத்த தேசு இல்லார் படை ஆண்மை - நாவிதன் வாள்
சேப்பிலைக்குக் கூர்த்துவிடல். (பாடல்: 284)
தம்மை எதிர்கொள்ளுவதற்காக ஒருங்கே திரண்டு காத்திருக்கும் பெருவீரரைப் பார்த்த அளவில் ஒன்றும் பேச முடியாமல் அஞ்சிப் புறங்காட்டி ஓடும் வீரர் மீது படை தொடுத்தல் ஆண்மை அன்று. அது முடி மழிக்கும் கூர்மையான நாவிதரின் கத்தியைக் கொண்டு மிக மெலிந்து இருக்கும் சேப்பிலையை வெட்டுவதற்கு ஒப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.