பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
செங்கோல் முறைமையினின்றும் கெடுதல் இல்லாத அழகிய குளிர்ந்த தாரினை அணிபவரான மன்னர்கள், தம் அடி நிழலிலே வாழும் குடிமக்களை வருத்தாது, வரி வசூலித்தலும் போலாகாமல், காலமறிந்து பக்குவமாக வசூலித்துக் கொள்க
பொருத்தம் அழியாத பூந்தண்டார் மன்னர்
அருத்தம் அடிநிழ லாரை}வருத்தாது
கொண்டாரும் போலாதே கோடல் அதுவன்றோ
வண்டூதா துண்டு விடல். (பாடல்}242)
செங்கோல் முறைமையினின்றும் கெடுதல் இல்லாத அழகிய குளிர்ந்த தாரினை அணிபவரான மன்னர்கள், தம் அடி நிழலிலே வாழும் குடிமக்களை வருத்தாது, வரி வசூலித்தலும் போலாகாமல், காலமறிந்து பக்குவமாக வசூலித்துக் கொள்க. அதுதான், வண்டினம் பூவைச் சிதைக்காமல் அதிலுள்ள தேனைக் குடிப்பதனோடு பொருந்துவதாகும். "வண்டூ தாதுண்டு விடல்' என்பது
பழமொழி.