முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மிக மெல்லிய இலைத்தளிராக இருந்தாலும் அதனைக் கிழிக்க வேண்டும் எனில் அதன் மேலே உளியை வைத்துத் தட்டினால்தான் முடியும்.

Updated On : 6 நவம்பர், 2022 at 4:35 PM
பகிர்:

விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்
முட்டாது அவரை வியங்கொள வேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்,
கொட்டாமல் செல்லாது, உளி.    (பாடல்: 279)


மிக மெல்லிய இலைத்தளிராக இருந்தாலும் அதனைக் கிழிக்க வேண்டும் எனில் அதன் மேலே உளியை வைத்துத் தட்டினால்தான் முடியும். அதுபோலச் சிறிய செயலாக இருப்பினும் ஒருவரிடம் அச்செயலை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிடுதல் கூடாது. அவரை இடைவிடாமல் ஏவி நினைவூட்டிக் கொண்டே இருத்தல் வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.