முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

நன்கு முதிர்ந்த தேங்காய்க் குலையில் தேங்காய்கள் பலவாக இருப்பதால் உரசி உரசித் தாமே வயல்களில் வீழும் நீர்வளம் மிக்க நாடனே!

Updated On : 31 டிசம்பர், 2023 at 7:04 PM
பகிர்:


விழுத் தொடையர் ஆகி விளங்கி, தொல் வந்தார்
ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல், - பழத் தெங்கு
செய்த்தலை வீழும் புனல் ஊர - அஃதே, நன்
நெய்த்தலைப் பால் உக்குவிடல்      (பாடல்: 339)

நன்கு முதிர்ந்த தேங்காய்க் குலையில் தேங்காய்கள் பலவாக இருப்பதால் உரசி உரசித் தாமே வயல்களில் வீழும் நீர்வளம் மிக்க நாடனே! விழுமியங்களைத் தொடர்ந்து பின்பற்றிவரும் பாரம்பரியத்தில் வந்தவர் சிறந்த ஒழுக்கமுடையவராக வாழ்வர். அவர்தம் வாழ்வு பசுநெய்யின் மேல் மேலும் பாலை ஊற்றியது போன்று இனிமையைத் தருவதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.