முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

வேற்படையை வெல்லத்தகும் விரும்புதற்கு உரிய கண்களையும், அணிகளையும் அணிந்த பெண்ணே!

Updated On : 9 ஜூலை, 2023 at 5:47 PM
பகிர்:


அடையப்  பயின்றவர் சொல் ஆற்றுவராக் கேட்டால்,
உடையது ஒன்று இல்லாமை ஒட்டின்  படை வென்று
அடைய அமர்த்த கண் ஆயிழாய்!  அஃதால்,
இடையன் எறிந்த மரம்.             (பாடல்: 314)


வேற்படையை வெல்லத்தகும் விரும்புதற்கு உரிய கண்களையும், அணிகளையும் அணிந்த பெண்ணே! மிக நெருக்கமாகப் பழகியவர் தன்னிடம் ஒன்றைக் கேட்க அப்பொருள் தன்னிடத்தில் உள்ள ஒன்றாகவும்  அதைத் தருவதாகவும் உறுதிபடக் கூறுதல் வேண்டும். அவ்வாறு கூறுதல் இடையன் ஒருவன் தனக்கு வேண்டுமென வெட்டிவிட்ட பச்சிலைகளை உடைய மரக்கிளையை ஒத்தது ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.