பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
கொற்றக்குடை நிழலில் தேரில் அமர்ந்து வரும் அரசர் தமக்கு இது மிகப் பிடிக்கும் என்று விரும்பும்
இடு குடைத் தேர் மன்னர், எமக்கு அமையும் என்று,
கடிது அவர் காதலிப்ப தாம் காதல் கொண்டு
முடிதல் எனைத்தும் உணரா முயறல்
கடிய கனைத்துவிடல். (பாடல்: 309)
கொற்றக்குடை நிழலில் தேரில் அமர்ந்து வரும் அரசர் தமக்கு இது மிகப் பிடிக்கும் என்று விரும்பும் அதே பொருளைத் தமக்குப் பிடிக்கும் என்று விரும்புதலும் அதை அடைய முயலுதலும் கொடிய புலியை அருகு அழைத்துக் கொள்வது போன்றது ஆகும்.