பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
நன்மை எது, தீமை எது என்பதைப் பிரித்து அறியத் தெரியாதவர் பயனற்ற செயல்களைச் செய்யாது விலகி இருக்க மாட்டார். மூத்தவர் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்.
தெரியாதார் சொல்லும் திறன் இன்மை தீதாப்
பரியார், பயன் இன்மை செய்து, பெரியார் சொல்
கொள்ளாது, தாம் தம்மைக் காவாதவர் பிறரைக்
கள்ளராச் செய்குறுவார் - (பாடல்: 310)
நன்மை எது, தீமை எது என்பதைப் பிரித்து அறியத் தெரியாதவர் பயனற்ற செயல்களைச் செய்யாது விலகி இருக்க மாட்டார். மூத்தவர் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார். தொடர்ந்து பயன் இல்லாதவற்றைச் செய்வார். தவறு நேராமல் தம்மைக் காத்துக்கொள்ளவும் மாட்டார். தம் தவற்றை உணர்வதற்கும், உணர்ந்து திருந்துவதற்கும் பதிலாக மற்றவர்கள் மேல் குற்றங்களைச் சுமத்துவர்.