பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
அரசனுக்கு ஆகாதவற்றை அரசனைச் சார்ந்தவர் செய்துவிட அதனை அறிந்த அரசன் வெளியே காட்டாது பொறுத்துப் போக மேலும் மேலும் தவற்றைச் செய்தால் அது கூன் விழுந்த முதுகின்மேல் பெரும் கட்டி வந்தது போல் ஆகும்.
உறாஅ வகையது செய்தாரை, வேந்தன்
பொறாஅஅன்போல, பொறுத்தால், பொறாஅமை
மேன்மேலும் செய்து விடுதல் அது அன்றோ,
கூன்மேல் எழுந்த குரு. (பாடல்: 305)
அரசனுக்கு ஆகாதவற்றை அரசனைச் சார்ந்தவர் செய்துவிட அதனை அறிந்த அரசன் வெளியே காட்டாது பொறுத்துப் போக மேலும் மேலும் தவற்றைச் செய்தால் அது கூன் விழுந்த முதுகின்மேல் பெரும் கட்டி வந்தது போல் ஆகும். அவனுக்கு அழிவைத் தரும்.