பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
ஒரு செயலை முடிக்க விரும்பும் போது முடிக்கும் திறனும் தெளிந்த அறிவும் உடையவரைத் தேடிப் பிடித்து ஒப்படைத்தல் வேண்டும்.
தெற்ற அறிவுடையார்க்கு அல்லால், திறன் இல்லா
முற்றலை நாடிக் கருமம் செய வையார்,
கற்று ஒன்று அறிந்து, கசடு அற்ற காலையும்
அற்றதன்பால் தேம்பல் நன்று. (பாடல்: 373)
ஒரு செயலை முடிக்க விரும்பும் போது முடிக்கும் திறனும் தெளிந்த அறிவும் உடையவரைத் தேடிப் பிடித்து ஒப்படைத்தல் வேண்டும். நன்கு படித்து இருந்தபோதும் பழையபடி கற்று இருந்த போதும் பண்பு குறைந்தவரிடம் பணியை ஒப்படைத்தல் நன்று அன்று. அத்தகையோரிடம் இருந்து விலகிக் கொள்ளுதலே நன்று.