முதுமை
மூப்பினாலே முதுகு கூனிப்போய், உடல் தளர்ச்சியுற்றுத் தலை நடுங்கிக் கொண்டிருக்க, தண்டினை ஊன்றியவளாகத் தள்ளாடி விழுந்து விழுந்து செல்கின்றாள் இந்தக் கிழவி.
தாழாத், தளராத் தலைநடுங்காத், தண்டூன்றா.
வீழா இறக்கும் இவள்மாட்டும்,- காழிலா
மம்மர்கொள் மாந்தர்க்கு அணங்காகும் தன்கைக்கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.
(பாடல் 14 அதிகாரம் இளமை நிலையாமை)
மூப்பினாலே முதுகு கூனிப்போய், உடல் தளர்ச்சியுற்றுத் தலை நடுங்கிக் கொண்டிருக்க, தண்டினை ஊன்றியவளாகத் தள்ளாடி விழுந்து விழுந்து செல்கின்றாள் இந்தக் கிழவி. உறுதியில்லாத மோகங்கொண்டு திரிகின்ற மாந்தர்களுக்கு, இவளுடைய கையிலிருக்கும் ஊன்று கோலானது, இவள் தாயின் கைக் கோலாக இருந்த காலத்திலே, இவளிடத்தும் காமத்தால் மிக்க வருத்தம் உண்டாகியிருக்கும் அல்லவோ?