இளமையில் துறவு
இல்லத்திலிருந்து மனையாளோடும் வாழ்வதாகிய மனை வாழ்க்கை, அந்த வாழ்வினைத் துய்த்து இன்புறுகின்ற இளமைப் பருவம், சமூகத்திலே ஏற்படுகின்ற செல்வாக்கு, உடலின் வலிமை...
இல்லம், இளமை, எழில், வனப்பு, மீக்கூற்றம்,
செல்வம், வலி, யென் றிவையெல்லாம்,}மெல்ல
நிலையாமை கண்டு, நெடியார், துறப்பர்
Advertisement
தலையாயார் தாமுய்யக் கொண்டு.
( பாடல் 53 அதிகாரம்: துறவு )
இல்லத்திலிருந்து மனையாளோடும் வாழ்வதாகிய மனை வாழ்க்கை, அந்த வாழ்வினைத் துய்த்து இன்புறுகின்ற இளமைப் பருவம், சமூகத்திலே ஏற்படுகின்ற செல்வாக்கு, உடலின் வலிமை எனப்படுகின்ற இவை எல்லாம் நிலைத்திராமையை அமைதியாக ஆராய்ந்து பார்த்து மேலோர்கள், தாங்கள் பிறவித் துன்பங்களினின்றும் கடைத் தேறுவதற்கான வழிகளை மேற்கொள்ளுதலில் காலத்தை நீட்டியாதவராக, இளமையிலேயே உலகப் பற்றினை துறந்து விடுவார்கள்.