முகப்பு
வெள்ளிமணி

வெற்றி தரும் கொற்றவை!

பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில், ஓர் அம்மனின் கோயிலை முதன்மையாக வைத்து தங்களது போர்ப் பயிற்சிப் படை வீட்டை அமைத்தனர். அந்த அம்மனே படை வீட்டம்மன் என்ற பெயரில் அருள்புகிறாள். பண்ருட்டியில், வைத்திரெட்ட

Updated On : 19 செப்டம்பர், 2012 at 11:00 PM
பகிர்:

பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில், ஓர் அம்மனின் கோயிலை முதன்மையாக வைத்து தங்களது போர்ப் பயிற்சிப் படை வீட்டை அமைத்தனர். அந்த அம்மனே படை வீட்டம்மன் என்ற பெயரில் அருள்புகிறாள். பண்ருட்டியில், வைத்திரெட்டிப் பாளையம் பகுதியில் உள்ள கோயிலில் வீற்றிருக்கிறாள் படை வீட்டம்மன். தன்னை வழிபடுவோருக்கு வெற்றியைத் தரும் கொற்றவையாக விளங்குகிறாள். இவளை வழிபட திருமணத் தடை நீங்கும். கொடிய நோய்களும் அகலும். நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இரவு இக்கோயிலில் தங்கி அம்மனை வழிபடுகின்றனர். குறைகள் நீங்கிய பின் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

இக்கோயிலில் செடில் உற்ஸவமும், தேர்த் திருவிழாவும் மிகவும் புகழ் பெற்றவை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இக்கோயிலுக்குரிய தேர் பழுதடைந்து திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது ஆகமக்கலை விதிமுறைகளின்படி தேர்த் திருப்பணி நடைபெறுகிறது. விரைவில் திருப்பணி முடிந்து படைவீட்டம்மன் தேரில் பவனி வர வேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பம். மேலும் தகவலுக்கு 99657 22777.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.