மனிதனுக்கு சரீரமாகிற உடல் மட்டும்தான் உண்டு. ஆத்மா இல்லை என்றால், இன்பமும், அவற்றைத் தருகின்ற பொருள்களும்தான் மிஞ்சும். இவற்றுக்காக உழைப்பதற்கு நாம் உயிரைப் பற்றிக்கொண்டு இருக்க வேண்டுமா? பிறகு, மற்றொரு கேள்வி எழுகிறது. இனி வரப்போகிற தலைமுறைகளுக்காக நாம் ஏன் உழைக்கலாகாது? அவற்றுக்காக ஏன் எதையாவது ஒருவன் செய்ய வேண்டும்? அத்தகைய பணியுடன் அவனைப் பிணைப்பது எது? ஆத்மா இல்லை, சரீரம்தான் உண்டு என்றால், மனித வர்க்கமோ அல்லது இனி வரப்போகிற தலைமுறைகளோ ஏன் வாழ வேண்டும்? வாழ்க்கையின் போராட்டங்களில் ஏன் ஈடுபட வேண்டும்? உண்மையைச் சொன்னால், ஆத்மா இல்லை என்றால் நம்மில் ஒவ்வொருவரும் தனியாகவும் எல்லோரும் மொத்தமாகவும் பேணிப் போற்றுகின்ற பெரிய நியதிகள் எல்லாம் மறைந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.