அறிவு மட்டும் போதாது
மகாபாரத தருமரும், துரியோதனனும் ஒரே பள்ளியில் கல்வி கற்றவர்கள். தருமன் நல்லதையே நினைத்து
மகாபாரத தருமரும், துரியோதனனும் ஒரே பள்ளியில் கல்வி கற்றவர்கள். தருமன் நல்லதையே நினைத்து நல்லதை செய்வதே தருமம் என வாழ்ந்தவர். ஆனால் துரியோதனின் நிலை வேறு! அவன் கூறுவதைக் கேளுங்கள்.
"நல்லது நினைக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் மனம் அதனை செய்யவிடாது. ஆனால் என் மனது கெட்டது செய்வதை ஏற்கிறது. ஆக, அதன்படி செய்கிறேன்!'' என்றான்.
இருவர் படிப்பு ஒன்று என்றாலும், அதனை செயல்படுத்துவதில்தான் எவ்வளவு வித்தியாசம்? ஆக, அறிவு மட்டும் போதாது.
அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.