வெள்ளிமணி

சித்திர புத்திரன்- சித்திர குப்தனானது

தேவலோகத்தில் எல்லாருக்கும் சிவபிரான் வேலை களைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ புண்ணியங்களைக்

தினமணி

தேவலோகத்தில் எல்லாருக்கும் சிவபிரான் வேலை களைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுக்கும் பணியை யாருக்கும் தராதது நினைவுக்கு வந்தது. இதற்காக புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார்.

சிவபெருமான் இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கையில் பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் சித்திரத்தை வரைந்தார். அதைப்பார்த்து மகிழ்ந்த பெருமான் அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால்தான் அவர் "சித்திரபுத்திரன்' என்று பெயர் பெற்றார்.

"சித்திரம் என்பதற்கு ஆச்சரியமானது' என்றும் ஒரு பொருள் உண்டு. "குப்தன்' என்றால் "ரகசியம்' என்று பொருள். அவர் கணக்குகள் எழுதும் விதம் ஆச்சரியமாக இருக்கும். மேலும் எப்படிப்பட்ட ரகசியத்தையும் கண்டறிந்து கணக்கெழுதி விடுவார். எனவேதான் சித்திர புத்திரன் சித்திர குப்தன் எனப்பட்டார்.

சித்திர குப்தனுக்கு காஞ்சிபுரத்தில் உள்ள சித்திர குப்தர் கோயிலும் தேனி மாவட்டம், கோடாங்கிபட்டிக்கு மேற்கே தீர்த்தத் தொட்டி எனும் பகுதியில் சித்திர புத்திர நாயனார் என்ற பெயரில் ஒரு கோயிலும் உள்ளது.

(கிருபானந்தவாரியார் சொற்பொழிவிலிருந்து)

- சொ.மு. முத்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

திருப்பூர்: போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை கைது!

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT