வெள்ளிமணி

பொன்மொழிகள்!

அளவுக்கும் அதிகமாக உணவு உட்கொள்ளுதல், அளவுக்கும் அதிகமாக பருகுதல், தீயவர்களிடமிருந்து பரிசுகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய பாவங்கள் நீக்கப்பட வேண்டும்.

சுவாமி கமலாத்மானந்தர்

அளவுக்கும் அதிகமாக உணவு உட்கொள்ளுதல், அளவுக்கும் அதிகமாக பருகுதல், தீயவர்களிடமிருந்து பரிசுகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய பாவங்கள் நீக்கப்பட வேண்டும்.

-அகமர்ஷண சூக்தம்

பரம்பொருள்தான் காரணமும், காரியமும் ஆக இருக்கிறது. அந்தப் பரம்பொருளைத் தரிசித்தபிறகு, இதயத்தின் முடிச்சுகள் அவிழ்ந்து போகின்றன; சந்தேகங்கள் எல்லாம் நீங்கிவிடுகின்றன; எல்லாவிதமான வினைப்பயன்களும் அழிகின்றன.

-முண்டக உபநிஷதம் 2.2.8

ஒருவன் தனக்கு உரிய கர்மங்களை முறையாகக் கடைப்பிடித்து வந்தாலே போதும்; அவன் மேன்மையடைந்துவிடுவான்.

- கருட புராணம்

கல்வி கற்பித்த ஆசிரியருக்குக் காணிக்கை தருதல், வேள்வி செய்தல், தவம் மேற்கொள்ளுதல், சாஸ்திரங்களைக் கற்றறிதல் ஆகிய நான்கையும் பாதுகாத்து வளர்க்க வேண்டிய கடமையாகக் கொள்ள வேண்டும். அவ்விதம் செய்யாவிட்டால், எந்த இடத்திலும் இவற்றால் உண்டாகும் பயன் கிடைக்காமல் பாழ்படும்.

-ஆச்சாரக்கோவை

இறைவனின் பெருமை பற்றிய ஞானத்துடன் கூடியதும், மற்ற எதனிடமும் காட்டப்படாமல் இறைவனிடம் மட்டும் காட்டப்படுவதுமான விசேஷ அன்பே பக்தி எனப்படும். இத்தகைய பக்தியால்தான் முக்தி கிடைக்குமே தவிர, வேறு வழியில் முக்தி கிடைக்காது.

-மத்வாச்சாரியார் (துவைதம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT