வெள்ளிமணி

பொன்மொழிகள்!

நாம் நீராடும்போது புண்ணிய நதிகளின் பெயரைக் கூறி, அவற்றில் நீராடுவதாகத் தியானம் செய்து வேத மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அவ்விதம் செய்தால் நம்முடைய உடல் புனிதத் தன்மை அடையும்.    

சுவாமி கமலாத்மானந்தர்


நாம் நீராடும்போது புண்ணிய நதிகளின் பெயரைக் கூறி, அவற்றில் நீராடுவதாகத் தியானம் செய்து வேத மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அவ்விதம் செய்தால் நம்முடைய உடல் புனிதத் தன்மை அடையும்.    
- அக்கினி புராணம்

மனஉறுதி இருப்பவர்கள் எதைப் பற்றியும் சரியாகத் தீர்மானம் செய்வார்கள்; அவர்கள் எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும், தீர்மானித்த வேலையை செய்தே முடிப்பார்கள்; அவர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட வேலை நல்லதென்று தோன்றினால், உலகமே எதிர்த்தாலும் அதைச் செய்துதான் முடிப்பார்கள். 

மனஉறுதி உள்ளவர்களின் முன்னால் உள்ள மலையும் அணுவாகும்; கடலும் நீர்த்துளியாகும்  இப்படியெல்லாம் நடப்பதற்கு மனம் உறுதியாக இருப்பதுதான் காரணம். அது இறைவன் சாந்நித்தியம் ஆகும்.        
- ரிக் வேதம்

நான் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கண்ணன் பெயரைச் சொல்லி விஷம் குடித்தேன். ஆனால் என்ன ஆச்சரியம்! அந்தக் கொடிய விஷம் பகவானுடைய சரணாம்ருதமாகிவிட்டதே!        
- மீராபாய்

மனிதர்கள் விரும்பியதை அடைந்ததும் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கக் கூடாது; இழப்பு வந்தால் அதிகமாக வருந்தக் கூடாது; நிதி நெருக்கடிகள் வரும்போது சோகத்தினால் தர்மத்தைக் கைவிடக் கூடாது.        
- வியாத கீதை

மாணிக்கத்தின் பிரகாசத்தைக் கூட அதன்மீது படியும் மாசு மங்கச் செய்கிறது. அதுபோல் அறிஞர்கள் சிலருடைய நல்ல இயல்புகளையும் செல்வம் கறைப் படுத்திவிடுகிறது.
- ஸ்ரீ ராமபிரான்

ஒருவன் ஞானத்தில் நிலைபெற்றுத் தன்னுடைய பந்தத்தையும் மோட்சத்தையும் பற்றி நன்றாகக் கவனிக்க வேண்டும்; இந்திரியங்களின் சிதறலே பந்தம், அவற்றின் அடக்கமே மோட்சம். 
- உத்தவ கீதை

இந்த உலகிலுள்ள எல்லா உயிரினங்களிலும் மனிதனால் மட்டுமே புலன்களையடக்கி, இறைவன் சிந்தனைகளுடன் வாழ முடியும்; மனிதனால் மட்டுமே ஆன்மிக சாதனைகள் செய்து இறைவனை உணர முடியும்.
 -  ஸ்ரீ கிருஷ்ணன் 

இறைவனே! உன் அடிமையைக் காப்பாற்றி ஆட்கொள்வது உன் கடமை அல்லவா!  நான் இனிப் பிறப்பெடுக்க முடியாது! நீயே சரணம்!      
- அருணகிரிநாதர் 

பிரம்மம் பூரணமானது. பிரம்மத்திலிருந்து பிறக்கும் பிரபஞ்சமும் பூரணமானது. பிரம்மத்திலிருந்து பிரபஞ்சம் பிறப்பதால் பிரம்மத்தின் பூரணத்தன்மை குறைந்துவிடுவதில்லை. பிரம்மாகிய பூரணம் பலவற்றைத் தோற்றுவித்தாலும் அது குறையாமல் பூரணமாக விளங்குகிறது.
- ஈசாவாஸ்ய உபநிஷதம், சாந்தி மந்திரம்

புண்ணியம் பாவம் இரண்டையும் இங்கேவிட்டவன், தூய்மையுள்ளவன். அவனே இந்த உலகில் அறிவோடு வாழ்பவன்  அவனே உண்மையில் துறவி எனப்படுவான்.    
-  புத்தர் 

நல்லவனும் தன் புண்ணியம் பயனளிக்க ஆரம்பிக்காதவரை துன்பத்தையே காண்கிறான். ஆனால் புண்ணியம் பயனைக் கொடுக்கும்போது, அவன் நன்மையை உணர்கிறான்.        
- புத்தர்

ஒன்றாக இருந்த பிரம்மம் பலவாகப் பெருகியது; அது அண்டங்களாகவும் அனைத்து உயிர்களாகவும் மலர்ந்தது. எனவே, அனைத்திலும் அமர்ந்து உறைவது பிரம்மமேயாகும். அதுவே நம் உள்ளத்திலும் ஒளிர்கிறது. அதை நாம் "ஆத்மா' என்கிறோம்.    
- சாந்தோக்கிய உபநிஷதம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT