பொன்மொழிகள்! 
வெள்ளிமணி

பொன்மொழிகள்!

விவேகமற்ற ஒருவனை எளிதில் திருப்தி செய்யலாம். நல்ல விவேகம் படைத்தவனை இன்னும் எளிதில் திருப்தி செய்யலாம்.  அல்ப ஞானத்தால் கர்வம்  பிடித்தவனை பிரம்மனாலும் திருப்தி செய்ய முடியாது.

DIN

தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

விவேகமற்ற ஒருவனை எளிதில் திருப்தி செய்யலாம். நல்ல விவேகம் படைத்தவனை இன்னும் எளிதில் திருப்தி செய்யலாம்.  அல்ப ஞானத்தால் கர்வம்  பிடித்தவனை பிரம்மனாலும் திருப்தி செய்ய முடியாது.
-பர்த்ருஹரியின் நீதி சதகம், 3
அறிவிலியாகிய இந்த ஏழ்மையின் மனம், நினைக்கக் கூடாதவற்றை எல்லாம் நினைத்து, புண்ணாகிப் போனது; அந்த நிலை இனி போதும் (இனிமேலும் தொடர வேண்டாம்) பராபரமே! 
-தாயுமானவர்,  பராபரக்கண்ணி 35
ஹே ஹனுமானே! நீங்கள் மிகுந்த ஆற்றல் வாய்ந்த உடலுடன் இணையற்ற வலிமை பொருந்திய வீரர்; நீங்கள் தீய சிந்தனைகளை விரட்டுபவர்; நீங்கள் நற்சிந்தனைகளின் நண்பர்.    
-துளசிதாசர்,  ஹனுமன் சாலீஸா 3 
எதையும் உடலுக்கு அவசியமான அளவுக்கு மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதைவிட அதிகமாக ஏற்பது திருட்டு, அது தண்டனைக்கு உரிய செயலாகும்.
-மனு
நாம் இருப்பதும் இறப்பதும், வறுமையும் செல்வமும், "தெய்வச் செயல்' என்று நினைத்து, நம் வீட்டில் அதிதி (விருந்தினர்) போல் இன்பமும் துன்பமும் இல்லாமல் இருக்க வேண்டும்.
- ஸ்ரீ ஆதிசங்கரர்
ஆத்மஞானத்தை அக்ஞானிகளாகிய மக்களிடையே பரவச் செய்வதோடு, உலகம் முழுவதையும் தானமாக அளிப்பானாயின், பின்னையது முன்னையதற்கு நிறையில் சமமாகாது.
-மகாபாரதம்
தேகத்தை "ஆத்மா' என்று நினைத்து மயங்கும் புத்தியே துவைதம்; அது இல்லாமல் போவதே அத்வைதம்.
-ஸ்ரீ ரமண மகரிஷி
தன்னைத் தான் வென்றவன் ஆயிரம் வீரர்களை வென்றவனைவிட மேலானவன். ஜீவகாருண்யமே நல்லொழுக்கத்தின் அடிப்படையாகும்.
-பகவான் மகாவீரர்
நல்ல வழியில் நன்கு நிர்வகிக்கப் பெற்ற மனம்தான் நமக்கு மாபெரும் உதவி செய்யும். அவ்வளவு தூரம் தாயோ, தந்தையோ, அல்லது வேறு எந்த உறவினருமோ நமக்கு உதவி செய்ய முடியாது.
-பகவான் புத்தர்
நமக்கு நாமேதான் பகைவனும் நண்பனும் ஆவோம்.
இந்தப் பிறவியிலும், அடுத்த பிறவியிலும் இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்கும், நல்வினை தீவினைப்
பயன்களை நாம் நுகர்வதற்கும் நமக்கு நாம்தான் 
காரணகர்த்தாவாக ஆகிறோம். அதேபோல, நமக்கு நாமே
 தலைவனாகவும் இருக்கிறோம்.
-திருமூலர் 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்சி சூரியூரில் ரூ. 3 கோடியில் புதிய ஜல்லிக்கட்டு திடல் - துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்!

என் பேரு கரசாமி..! தனுஷின் புதிய பட டைட்டில் டீசர்!

எஸ்ஐஆர்! சரிபார்ப்புக்கான ஆவணமாக 10 ஆம் வகுப்பு நுழைவுச் சீட்டை ஏற்க மறுப்பு!

பொங்கல் கொண்டாட்டம்! நடனமாடி மகிழ்ந்த தமிழிசை சௌந்தரராஜன்!

அமலாக்கத் துறை விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்திய விவகாரம்: மம்தாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT