முகப்பு
உலகம்

தாய்லாந்து பஸ் விபத்து: மலேசிய சுற்றுலாப் பயணிகள் 13 பேர் பலி

தாய்லாந்து நாட்டில் இன்று மலேசிய சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ் விபத்துக்குள்ளனாதில் 13 பேர் இறந்தனர்.

Updated On : 20 டிசம்பர், 2015 at 5:09 PM
பகிர்:

தாய்லாந்து நாட்டில் இன்று மலேசிய சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ் விபத்துக்குள்ளனாதில் 13 பேர் இறந்தனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிலிருந்து 700 கி.மீ. தொலைவில் உள்ள பிரபல சுற்றுலா தலமான சியாங் மாய் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது.

மலேசிய சுற்றுலாப் பயணிகள் 21 பேருடன் சென்ற பேருந்து, எதிரே வந்த மற்றொரு வாகனத்துடன் மோதியது. பின்னர் அருகேயிருந்த மின்கம்பத்திலும் மோதியது. இதில் பேருந்தில் இருந்த 13 மலேசியப் பயணிகள் இறந்தனர். பேருந்தின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் படுகாயமடைந்தனர்.

Advertisement

உலகிலேயே சாலை விபத்துகளில் தாய்லாந்து இரண்டாம் இடம் பிடித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் ஆய்வுப்படி தாய்லாந்து நாட்டில், ஒருலட்சம் பேரில் 36 பேர் சாலை விபத்தில் இறப்பது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.