உலகம்

இராக் மகப்பேறு மருத்துவமனையில் தீவிபத்து: 11 சிசுக்கள் பலி

தினமணி

இராக் தலைநகர் பாக்தாதில், மகப்பேறு மருத்துவமனையில் புதன்கிழமை நேரிட்ட தீவிபத்தில் 11 சிசுக்கள் உயிரிழந்ததாக மருத்துவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் அகமது அல்-ருடெய்னி தெரிவித்ததாவது:

பாக்தாத் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள யார்மெளக் மருத்துவமனையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில், குறைமாதத்தில் பிறந்த 11 சிசுக்கள் உயிரிழன. 29 சிசுக்கள் பத்திரமாக மீட்கப்பட்டன.

மின்கசிவு காரணமாக இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

தீவிபத்தினால் மூச்சுத் திணறல் ஏற்பட்ட 3 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாக்தாதின் அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாததால், பெரும்பாலானவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்வதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், அந்த நகரின் மிகப் பெரிய மகப்பேறு மருத்துவமனையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT