முகப்பு
உலகம்

சனிக் கிரக மேய்ச்சலுக்கு தயாராகும் 'காசினி' விண்கலம்!

சனிக் கிரகத்தின் துணைக்கோள்கள் மற்றும் அதன் வளையங்கள் குறித்து ஆராய ஏவப்பட்ட  'காசினி' விண்கலமானது, தற்போது 'சனிக்கிரக மேய்ச்சலுக்கு ' தயாராகி வருகிறது. 

Dinamani
Updated On : 24 ஜனவரி, 2024 at 6:50 PM
பகிர்:

வாஷிங்டன்: சனிக் கிரகத்தின் துணைக்கோள்கள் மற்றும் அதன் வளையங்கள் குறித்து ஆராய ஏவப்பட்ட  'காசினி' விண்கலமானது, தற்போது 'சனிக்கிரக மேய்ச்சலுக்கு ' தயாராகி வருகிறது. 

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சனிக் கிரகத்தின் துணைக்கோள்கள் மற்றும் அதன் வளையங்கள் குறித்து ஆய்வு செய்யும் பொருட்டு, 1997-ஆம் ஆண்டு வாக்கில் 'காசினி' என்னும் விண்கலத்தை ஏவியது.

தனது 19 வருட சேவையின் இறுதி கட்டமாக, சனிக்கிரகத்தின் துருவப்பகுதிகளின் மேலே மற்றும் கீழ் பகுதிகளில்  சுற்றி வரும் செயல்பாட்டினை காசினி தற்பொழுது மேற்கொள்ள உள்ளது.  அடுத்து வரும் ஐந்து மாதங்களுக்கு, வாரத்திற்கு ஒரு முறை என்ற கணக்கில், 20 முறை காசினி இந்த பயனத்தை மேற்கொள்ள உள்ளது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இது குறித்து காசினி திட்ட குழுவிவின் தலைமை விஞ்ஞானி லிண்டா ஸ்பீல்க்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிரகத்தின் வளையங்களின் வெளிப்பகுதிகளை மிகவும் நெருக்கத்தில் கடக்கவுள்ளதால் இந்த செயல்பாடானது, காசினி மேற்கொள்ளும்  ‘சனிக்கிரக வளைய மேய்ச்சல்' என்று அழைக்கப்படுவதாக தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →