இந்தோனேசியாவில் வலிமையான நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் மையப்பகுதியில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 6.4 அளவிலான வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இதன்மூலம் சுனாமி ஆபத்து இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜகார்தா: இந்தோனேசியாவின் மையப்பகுதியில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 6.4 அளவிலான வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இதன்மூலம் சுனாமி ஆபத்து இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள கிழக்கு நுசா டெங்காரா பகுதியில், உள்ளூர் நேரப்படி காலை 8.13 மணி அளவில் வலிமையான நிலநடுக்கம் உண்டானது. அங்கிருந்து 120 கி.மீ வடகிழக்கே உள்ள பிலாஸ் திமிர் பகுதியை மையமாக கொண்டிருந்த இந்த நிலநடுக்கமானது, கடல்மட்டத்திலிருந்து 524 அடி ஆழத்தில் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.