முகப்பு
உலகம்

சவுதி அரேபியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட 19 பேர் கைது

சவுதி அரேபியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடைய 19 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 8 ஜூலை, 2016 at 10:56 AM
பகிர்:

ரியாத்: சவுதி அரேபியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடைய 19 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் எதிரே தற்கொலைப்படை தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜெட்டாவில் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று சவுதி அரேபியா அடையாளம் கண்டுபிடித்துள்ளது. மேலும், மொஹமத் மசூதி அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் காவலர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, 12 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்பட 19 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக மதினாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய 26 வயது மதிக்கத்தக்க சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.