முகப்பு
உலகம்

இராக்கில் வெடிகுண்டு நிரப்பிய லாரியைக் கொண்டு தாக்குதல்: 51 பேர் பலி

இராக்கில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட டேங்கர் லாரியைக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் பலியாகினர்.

Updated On : 7 மார்ச், 2016 at 10:44 AM
பகிர்:

இராக்கில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட டேங்கர் லாரியைக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் பலியாகினர்.

தலைநகர் பாக்தாதுக்கு தெற்கே உள்ள ஹில்லா நகர எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

சோதனைச் சாவடியைக் குறி வைத்து, சரக்கு லாரி மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

 இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:

போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை வேளையில், சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல முயன்ற சரக்கு லாரியை வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

சோதனைக்காக அதனை ஓரமாக நிறுத்துமாறு வீரர்கள் உத்தரவிட்டனர். அப்போது அந்த லாரியில் பொருத்தப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

இதில் 20 வீரர்கள் உள்பட 51 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 72 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 11 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதலில் பலியான பெரும்பாலானோர் காரில் வந்த பொதுமக்கள். இவர்கள் சோதனைச் சாவடி வரிசையில் காத்திருந்த போது பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இராக்கில் கணிசமான பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள், அந்நாட்டில் பல இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர்.

எனினும் ஹில்லா பகுதி அரசுக் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.