பாகிஸ்தானில் பயணிகள் பேருந்தில் குண்டு வெடிப்பு: 5 பேர் பலி
பாகிஸ்தானின் பெஷாவரில் பயணிகள் பேருந்து ஒன்றில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பயணிகள் பேருந்து ஒன்றில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெஷாவரில் உள்ள மார்டான் நகரில் இருந்து புறப்பட்ட பயணிகள் பேருந்தில் இன்று காலை இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 15 பேர் காயமடைந்ததாக டான் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், பேருந்து பலத்த சேதமடைந்ததாகவும், பேருந்தில் சிக்கியவர்களை உடனடியாக வெளியேற்றி லேடி ரீடிங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
Advertisement