முகப்பு
உலகம்

காவல் நிலையத்திற்கு எதிரே கார் குண்டு வெடிப்பு: துருக்கியில் 8 பேர் பலி; 100 பேர் காயம்!

துருக்கியின் தியார்பகிர் மாகாணத்தில் இன்று காலை நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:51 AM
பகிர்:

அங்காரா: துருக்கியின் தியார்பகிர் மாகாணத்தில் இன்று காலை நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 8 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

துருக்கியின் தியார்பகிர் மாகாணத்தில் உள்ளது பக்லர் மாவட்டம். இங்கு அமைந்துள்ள தீவிரவாதம் மற்றும் கலவர தடுப்பு பிரிவு  காவல்துறை அலுவலகத்தின் வெளியே இன்று காலை சக்தி வாய்ந்த கார் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 8 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்

1984-ஆம் ஆண்டிலிருந்து அரசுக்கு எதிராகப் போராடி வரும்  'குர்தீஷ் தொழிலாளர் கட்சி' இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளது என்று தெரிய வந்துள்ளது.  இந்த குண்டுவெடிப்பில் கட்டிடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் அருகாமையில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து காவல்துறையினருக்கும், குர்தீஷ் தொழிலாளர் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டுள்ளது

முழு கட்டுரையைப் படிக்க →