உலகம்

நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் கென்னத் ஆரோ மறைவு

DIN

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார மேதை கென்னத் ஜே ஆரோ தனது 95-ஆவது வயதில் காலமானார்.
பொருளாதாரத்துக்காக மிக இளைய வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமை கொண்ட அவர், சந்தை அபாயங்கள், புத்தாக்கம், சந்தை அடிப்படைக் கணிதவியல் ஆகிவை குறித்து கோட்பாடுகளை உருவாக்கியுள்ளார்.
கலிஃபோர்னியா மாகாணம், பாலோ ஆல்டோ நரிலுள்ள தனது இல்லத்தில் உடல் நலக்குறைவு காரணமாக அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சமநிலைக் கோட்பாடு குறித்த கணிதவியலின் முன்னோடியாகத் திகழ்ந்ததற்காக, கென்னத் ஜே ஆரோவுக்கும், பிரிட்டன் பொருளாதார மேதை சர் ஜான் ஆர். ஹிக்ஸூக்கும் கடந்த 1772-ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு சமமாக பிரித்து வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT