உலகம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவு

DIN

ஜகார்தா: இந்தோனேசியாவின் தென்மேற்குப் பகுதியான சுலவேசி தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பலுவின் தென்மேற்குப் பகுதியான சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளதாகவும், 49 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கி சேதம் ஏற்பட்டது.  அவசர அவசரமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நிலஅதிர்வு காரணமாக 3 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT