ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனிநாடாக அறிவித்தது கேட்டாலோனியா
ஸ்பெயின் நாட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக பிரிந்து தனிநாடாக தன்னை அறிவித்துக்கொண்டது கேட்டாலோனியா.
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:28 PM
ஸ்பெயின் நாட்டின் முக்கிய மாகாணங்களில் ஒன்றாக இருந்த கேட்டாலோனியா, வெள்ளிக்கிழமை முதல் தன்னை தனிநாடாக அறிவித்துக்கொண்டது.
ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தில் கேட்டாலோனியா மாகாணம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனிநாடாக செயல்படுவது தொடர்பாக செப்டம்பர் 1-ந் தேதி அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனிநாடாக செயல்படுவதற்கு அம்மாகாண மக்கள் 90 சதவீதத்துக்கும் மேல் ஆதரவு தெரிவித்தனர்.
Advertisement
இந்நிலையில், ஸ்பெயினில் இருந்து அதிகாரப்பூர்வமாக பிரிவதாக கேட்டாலோனியா நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.