கொலம்பியாவில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு
கொலம்பியாவில் சுற்றுலா படகு மூழ்கிய விபத்தில் 9 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.
கொலம்பியாவில் சுற்றுலா படகு மூழ்கிய விபத்தில் 9 பேர் பலியாகினர்.
கொலம்பியா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள குவதாபே மாவட்டத்தில் உள்ள பீநோல் ஏரியில் 170 பயணிகளுடன் சொகுசு படகு ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்தப் படகு ஏரியின் மத்திய பகுதிக்கு சென்ற போது திடீரென மூழ்கத் தொடங்கியது.
இதனால் படகிலிருந்த அனைவரும் செய்வதறியாமல் கூச்சலிட்டனர். தொடர்ந்து படகில் பயணம் செய்த சுற்றுப்பயணிகள் அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் சுமார் 150க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.
Advertisement
இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மாயமான 30க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
150 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய படகில் 170க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததினால் இந்தப் படகு பாரம் தாங்காமல் மூழ்க்கியிருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.