உலகம்

ராணுவத்தில் பணிபுரியும் கர்ப்பிணி வீராங்கனைகளுக்கு புதிய சீருடைகள் தரப்பட்டன! எங்கே?

சினேகா

ஜெர்மனியில் ராணுவத்தில் பணிபுரியும் வீராங்கனைகள் கர்ப்ப காலத்தில் இறுக்கமான உடைகளை அணிவதில் சிரமம் உள்ளதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சோதனை அடிப்படையில் கர்ப்பிணிகளான 80 வீராங்கனைகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சீருடைகள் வழங்கப்பட்டது.

அது திருப்திகரமாக இருக்கவே மேலும் 500-க்கும் மேற்பட்ட புதிய சீருடைகளை தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளது ஜெர்மனி ராணுவம். தற்போது ஜெர்மனி ராணுவத்தில் 20,000-ம் மேற்பட்ட வீராங்கனைகள் பணிபுரிகிறார்கள். அவர்களுள் 2 சதவிகிதத்தினர் கர்ப்பவதிகளாக உள்ள நிலையில் அவர்களுக்கான சீருடையில் மாற்றம் தேவைப்பட்டது.

ஜெர்மனி ராணுவத்தில் ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சராசரியாக 2 சதவிகிதம் பேர் கர்ப்பிணிகளாக இருப்பதாகக் கூறியுள்ள ஜெர்மனி ராணுவம், ஏற்கெனவே சோதனை அடிப்படையில் கர்ப்பிணி வீராங்கனைகளுக்கான பிரத்யேக சீருடைகளை வழங்கியது. அந்த சீருடைகள் திருப்திகரமாக இருப்பதாக பயன்படுத்தியவர்கள் தெரிவித்ததை அடுத்து, முதற்கட்டமாக 500 சீருடைகளை வாங்க முடிவு செய்துள்ளதாக ஜெர்மனி ராணுவம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

முதல்வா் பதவியை அடைய அவசரப்படவில்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

SCROLL FOR NEXT