உலகம்

எகிப்து ராணுவத்தின் தீவிரவாத வேட்டை: 12 பேர் பலி 

DIN

கெய்ரோ: தீவிரவாதிகளுக்கு எதிராக எகிப்து ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதி முதல் எகிப்து நாட்டில் தீவிரவாத தாக்குதல் மற்றும் வெடிகுண்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களில் தீவிரவாதிகளை ஒழிக்கும்படி ராணுவத்துக்கு அந்நாட்டு அரசு கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது.

அதன் ஒரு பகுதியாக எகிப்து பாதுகாப்பு படையினர் சினாய் தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களைக் குறி வைத்து தீவிர தாக்குதல் நடத்தினர்.

இந்த திடீர் தாக்குதலில் 60 தீவிரவாதிகளின் இருப்பிடங்கள் குறிவைத்து அழிக்கப்பட்டுள்ளன. 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.  92 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த தகாவல்கள் அனைத்தும் எகிப்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT