உலகம்

வங்கதேசம்: ஹெலிகாப்டர் விபத்து: உயிர் தப்பினார் குவைத் ராணுவத் தளபதி

DIN

வங்கதேசத்தில், குவைத் ராணுவ தலைமைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் புதன்கிழமை விபத்துக்குள்ளானது. எனினும், இந்த விபத்தில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.
இதுகுறித்து குவைத் நாட்டைச் சேர்ந்த 'குனா' செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது:
குவைத் ராணுவ தலைமைத் தளபதி முகமது அல்-காந்தேர், வங்கதேசத்தில் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் புதன்கிழமை விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து உடைந்தது.
மோசமான பனி மூட்டம் காரணமாக மரத்தில் மோதிய அந்த ஹெலிகாப்டரின் வால் பகுதி உடைந்து, முன்பகுதி தரையில் மோதியபடி விழுந்தது.
இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்த ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. முகமது அல்-காந்தேர் உள்ளிட்டோர் காயமின்றி உயிர் தப்பினர் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT