துருக்கி: ரயில் விபத்தில் 24 பேர் பலி
துருக்கியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 24 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு துணை அதிபர் ரிசெப் ஆக்டக் திங்கள்கிழமை தெரிவித்தார்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM
துருக்கியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 24 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு துணை அதிபர் ரிசெப் ஆக்டக் திங்கள்கிழமை தெரிவித்தார்.
அந்த நாட்டின் தென்மேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகள் திங்கள்கிழமை நிறைவடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளதாகவும் ஆக்டக் கூறியதாக துருக்கி அரசுக்குச் சொந்தமான அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.