முகப்பு
உலகம்

ஐஎஸ் பயங்கரவாதியான மிக இளம் வயது பெண் இங்கிலாந்தில் கைது

ஐஎஸ் பயங்கரவாதியாக இருந்த தனது காதலன் மரணம் அடைந்ததை அடுத்து, சிரியா சென்று ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து, லண்டனில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த மிக இளம் வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 5 ஜூன், 2018 at 1:23 PM
பகிர்:

லண்டன்: ஐஎஸ் பயங்கரவாதியாக இருந்த தனது காதலன் மரணம் அடைந்ததை அடுத்து, சிரியா சென்று ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து, லண்டனில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த மிக இளம் வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில், ஐஎஸ் பயங்கரவாதி என்று குற்றம்சாட்டப்பட்டவர்களில், மிக மிக இளம் வயது பெண்ணாக இவர் கருதப்படுகிறது. இது காவல்துறைக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18 வயதாகும் சஃபா பௌலர், பிரிட்டனில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இருந்த தனது காதலன் மரணம் அடைந்ததை அடுத்து, தானும் ஐஎஸ் அமைப்பில் இணைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், அவர் இங்கிலாந்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நாளிலேயே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.